Tokyo Olympics ஈட்டி எறிதல் : தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா? இறுதி சுற்றுக்கு தகுதி!
ஒலிம்பிக் போட்டியில், இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்று முடிந்துள்ள ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், இந்தியாவுக்கான மற்றுமொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் திருவிழாவில் 13 ஆவது நாளான இன்று (ஆகஸ்ட் 4) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னதாக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா மற்றும் ஷிவ்பால் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் உலக நாடுகளை சேர்ந்த 16 வீரர்களும் இப்போட்டியில் களம் கண்டனர்.
சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
அதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்து இறுதி சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வெல்லும் அரியதொரு வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த இறுதி போட்டியானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே நீரஜ் சோப்ராவை தொடர்ந்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த வீரர் வெட்டர் 85.64 மீ மற்றும் பின்லாந்து நாட்டின் எடிலேடொலோ 84.50 மீ என்ற அளவுடன் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
RTE மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 13வரை கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிக்கை!
இதற்கு முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீராங்கனை அன்னு ராணி 14 ஆவது இடத்தை பெற்றிருந்தார். இப்போட்டியில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் கோல்ப், தடகளம், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஹாக்கி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.