சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

0
சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி - இன்றைய
சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!!

சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சரவணனும் சந்தியாவும் சிறந்த ஜோடி என விருது வாங்கி வந்ததை குடும்பத்தினர் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பிறகு சந்தியாவிடம் சிவகாமி கல்யாண வாழ்க்கையை குறித்து ஆதரவாக பேசுகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனும் சந்தியாவும் சமையல் போட்டியில் ஜெயித்துவிட்டார்களா என ஆர்வத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளனர். அப்போது சந்தியா கண்டிப்பாக தோல்வி அடைந்திருப்பார் என அர்ச்சனா நக்கல் அடித்து சிரித்து கொண்டிருக்க, விருதுடன் சந்தியாவும் சரவணனும் வருகின்றனர். என்னாச்சு ஜெயிச்சுடீங்களா என்று கேட்க அவங்க சிறந்த ஜோடி விருது வாங்கிருக்காங்க என்று பக்கத்து வீட்டில் இருப்பவர் கூறுகிறார்.

ரோடில் நின்று சண்டை போடும் ராதிகாவின் கணவர், பாக்கியாவிற்கு காண்பிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அப்போது சமையல் போட்டியில் அனைவரும் ஜெயிக்கலாம் ஆனால் சிறந்த ஜோடி விருது வாங்குவது கஷ்டம் என பக்கத்து வீட்டில் இருப்பவர் கூறுகிறார். உடனே சிவகாமி ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே வர சொல்கின்றனர். சிவகாமியும் அவரது கணவரும் சரவணன் சந்தியா வெளி உலகத்திற்கு நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் எதோ பிரச்சனை இருக்கிறது என்று பேசி கொள்கின்றனர்.

அப்போது சந்தியா பாத்திரம் கழுவ, அர்ச்சனா சமையல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து வம்பிழுக்க வருகிறார். அவர் சந்தியாவின் சமையல் குறித்து கிண்டல் செய்ய சிவகாமி அங்கே வந்து அவரை திட்டி அனுப்புகிறார். அர்ச்சனாவை பாத்திரம் கழுவ சொல்கிறார். சந்தியா பயங்கர தலைவலியில் இருக்க சிவகாமி உன் அம்மா போல நினைத்துக் கொள் என்று கூறி தைலம் தடவி விடுகிறார்.

திருமணத்திற்கு தயாராகும் கண்ணன், ஐஸ்வர்யா, உண்மையை தெரிந்துக் கொண்ட பிரசாந்த் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

சரவணனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க, தெரியல அத்தை நான் ஒண்ணுமே பண்ணவில்லை என்று கூறுகிறார். இல்லை நீ தான் எதோ பண்ணிருக்க அவன் மனசுல என்ன இருக்குனு தெரிந்துக் கொண்டு சீக்கிரம் சரி செய்ய வேண்டும் என பேசுகிறார். நான் சரவணனுடன் வாழ தான் ஆசைப்படுகிறேன் என்று சொல்ல, என் பையன் மனதில் உள்ள கவலையை நீ தான் சரி செய்ய வேண்டும் என சிவகாமி கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!