முத்து திரைப்பட கதையை காப்பியடித்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வேலைக்காரன் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த வேலைக்காரன் சீரியல் முத்து திரைப்படத்தை அப்படியே காப்பியடித்ததாலும், டிஆர்பி குறைந்துவிட்டதாலும் பாதியிலேயே இந்த சீரியலை நிறுத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளது.
வேலைக்காரன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வேலைக்காரன் சீரியல் இதுவரை 400 எபிசோடுகள் ஓடி விட்டது. இந்த வேலைக்காரன் சீரியல் 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தின் கதை போலவே இருப்பதால் பல விமர்சனங்களை பெற்றது. திரைப்படங்களை தான் அடுத்த திரைப்படத்தை பார்த்து காப்பியடித்து கொண்டிருக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
சீரியல்களை கூடவா திரைப்பட கதைகளை போல காப்பியடிக்க வேண்டும் என பல விமர்சனங்கள் வந்தபடி இருந்தனர். அதாவது இந்த தொடரில், வேலன் கதாபாத்திரத்தில் சபரி, வள்ளி கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியா, விசாலாட்சி கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகையான சோனா நாயர் மற்றும் ராகவன் கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்து வருகிறார். ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசான வேலன் வேலைக்காரனாக அறிமுகமாகுகிறார். பின்பு, வேலன் தான் ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசு என்பதை தெரிந்து கொண்ட ராகவன் வேலனுக்காக பல உதவிகளை செய்கிறார்.
விரைவில் ஊரடங்கு உத்தரவு அமல்? கொரோனா 5ம் அலை எதிரொலி! அரசு அறிவிப்பு!
அதாவது முதலில் வேலன் தான் வள்ளியை காதலித்து கொண்டிருக்கிறார். பின்பு, ராகவன் வள்ளியை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற விஷயம் தெரிந்ததும் ராகவனுக்காக விட்டு கொடுக்க நினைக்கிறார். ஒரு சீனில் கூட வேறு மாதிரியான கதையை கொண்டு செல்லாமல் முழுக்க முழுக்க முத்து திரைப்பட கதையை காப்பியடித்ததால் இந்த சீரியலின் டிஆர்பியும் குறைந்துவிட்டது. மேலும், இந்த சீரியலை முடித்துவிட்டு செல்லம்மா என்கிற புதிய சீரியலை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.