விரைவில் ஊரடங்கு உத்தரவு அமல்? கொரோனா 5ம் அலை எதிரொலி! அரசு அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க நாட்டில் ஐந்தாம் கொரோனா அலை பரவி வரும் காரணத்தால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்ய இருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹாலா தெரிவித்து உள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
உலகில் உள்ள சர்வேதேச நாடான சீனாவில் உள்ள முக்கிய நகரான வூகான் பகுதியில், சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் இந்த தொற்று சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் அண்மை நாட்களில் சீனா, இந்தியா ஆகிய பெரு நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. ஆனாலும் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா பரவலின் ஐந்தாவது அலை ஏற்பட்டு உள்ளதாக, அந்நாட்டின் சுகாராத் துறை அமைச்சர் ஜோ பாஹாலா தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து, நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகள் பெருக வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் சுகாராத் துறை அமைச்சர் ஜோ பாஹாலா தெரிவித்து உள்ளார்.