விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா & வருண் – டபுள் எவிக்சன்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த முறை வெளியேற இருக்கும் நபர்கள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது, பிக் பாஸ் நிகழ்ச்சி,. இந்த நிகழ்ச்சியினை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்ட 18 போட்டியாளர்களும் மக்கள் அனைவர்க்கும் புதிய முகங்களாக இருந்து வந்தனர். இதனால் போட்டி பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கூடுதலாக, இந்த முறை அனைவரும் டாஸ்கில் கவனம் செலுத்தி விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் 80 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. பல போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சற்று எமோஷனல் வீக் ஆக இந்த வாரம் இருந்தது என்று தான் கூற வேண்டும். இந்த முறை, பிக் பாஸ் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு போட்டி தற்போது சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று மக்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலை செய்து கொண்ட முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!
இந்த முறை ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருவர் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது வருண் மற்றும் அக்ஷ்ரா இருவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி இப்படி இருவர் எலிமினேட் செய்யப்பட்டது அனைவரையும் கூடுதலாக அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளது.