சன் டிவி ‘வானத்தைப் போல’ சீரியல் ஹீரோயின் விலகல், புதிய நாயகி அறிமுகம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான வானத்தை போல ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோயின் ஸ்வேதா தான் நடித்து வந்த துளசி கதாபாத்திரத்தில் இருந்து விலகியுள்ளார்.
ஹீரோயின் விலகல்:
சன் தொலைக்காட்சியில் முற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சென்று வருகிறது. அண்ணன் – தங்கை உறவை மையமாக வைத்து கதைக்களம் அமைந்திருப்பதால், தமிழக மக்களிடத்தில் ஆதரவை பெற்றுள்ளது. இந்த தொடரில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா நடித்த ‘துளசி’ கதாபாத்திரம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்பாராத காரணங்களினால் அவர் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இவர் விலகியதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் ரசிகர்கள் அதை சமூக ஊடகங்களில் பல்வேறு விதமாக கேள்விகளை எழுப்பினர்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கவனம் ஈர்க்கும் அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் விமர்சனம்!
இந்நிலையில் நடிகை ஸ்வேதா தனது சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, நான் வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகி இருக்கிறேன். முன்னதாக பரவி வந்த வதந்திகள் இப்போது உண்மையாகி விட்டது. துளசியாக இது எனது கடைசி நாள். இனி ரசிகர்கள் என்னை துளசியாக பார்க்க முடியாது. என்னை இதுவரை துளசியாக ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதன் பிறகு எந்த நடிகை துளசியாக நடிக்கப் போகிறார் என்பது குறித்தும் பல யூகங்கள் எழுந்தது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கவனம் ஈர்க்கும் அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் விமர்சனம்!
தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு புகைப்படத்தில் தெலுங்கு சீரியல் நடிகை மான்யா ஆனந்த் வானத்தை போல படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். இந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபல தெலுங்கு நிகழ்ச்சியான பாக்யரேகாவில் மான்யா ஆனந்த் நடித்துள்ளார். 300 எபிசோட்களை முடித்துள்ள மான்யா ஆனந்த், வானத்தைப் போல அடுத்த எபிசோடில் துளசியாக நடிக்க உள்ளார். இவர் துளசியாக நடித்த சில காட்சிகளும் இணையத்தில் வைரலானது. வனத்தைப் போல சீரியல் தன் ரசிகர்களை தக்க வைப்பதில் சிறப்பாக செயலாற்றி வருவதால், சமீபத்திய TRP ரேட்டிங்கில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.