விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கவனம் ஈர்க்கும் அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் விமர்சனம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது வாய்தா வடிவுக்கரசி என்ற கதாப்பாத்திரத்தில் நகைச்சவை நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா என்ட்ரி கொடுத்துள்ளதால், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
பாரதி கண்ணம்மா
மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இணங்க புத்தம் புதிய கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ரசனைக்குரிய ஒன்றாக மாறி இருக்கிறது. இத்தொடரில் இதுவரை எலியும், பூனையுமாக முட்டி மோதிக்கொண்டிருந்த பாரதி, கண்ணம்மா இருவரும் கோர்ட் உத்தரவுப்படி ஒன்றாக சேர்ந்து வாழ துவங்கியுள்ளனர். என்றாலும் 6 நாட்களில் கண்ணம்மா வீட்டை விட்டு செல்ல நினைக்கும் பாரதியை சரி செய்வதற்காக சௌந்தர்யா ஒரு வக்கீலை அனுப்பி வைக்கிறார்.
விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வாய்தா வடிவுக்கரசி என்றதொரு கதாப்பாத்திரத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா. தமிழ் சின்னத்திரையில் நகைச்சுவை நடிப்புக்கு பெயர் போன அறந்தாங்கி நிஷா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்ததும், இவர் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் எழத் துவங்கியது. ஏனென்றால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகியதும் இந்த சீரியல் என்னவாகுமோ என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் புதிய கண்ணம்மாவாக அறிமுகமான நடிகை வினுஷா அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான நடிப்பை கொடுத்து வருகிறார். இதனுடன் இந்த சீரியல் முழுக்க முழுக்க பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகளுடன் வெளியாகி வழக்கம் போல ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதற்கிடையில் இந்த கதையில் கூடுதலாக சில ஸ்வாரசியத்தை சேர்க்கும் விதமாக வாய்தா வடிவுக்கரசி கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ பரினா வீட்டில் நடைபெற்ற விஷேசம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
இவர் சௌந்தர்யாவின் ஆள் என்பதால் பாரதி, கண்ணம்மா சேருவதற்கு உரிய அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அதுவும் இப்போதெல்லாம் வாய்தா வடிவுக்கரசியாக அறந்தாங்கி நிஷா வரும் காட்சிகள் தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அதிகம் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் அறந்தாங்கி நிஷா வரும் காட்சிகள் அத்தனையும் இத்தொடரில் ரசிக்கக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது. இருந்தாலும் ஒரு வில்லி இல்லாமல் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம் திக்குமுக்காடி கொண்டிருக்கிறது என்றும் நிஷாவை நம்பி தான் இனி மொத்த கதையும் உள்ளது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.