நிபா வைரஸுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு – சாட் ஆக்ஸ் 1 விரைவில் பயன்பாடு!
கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 12 வயது சிறுவன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவ்வைரஸிற்கு எதிராக தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ்:
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. முதல் மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நிபா வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிபா வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ரூ.750 உதவித்தொகையுடன் ITI மாணவர் சேர்க்கை – செப்.15 கடைசி நாள்!
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ம் ஆண்டு கேரளாவில் நிபா வைரசால் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது தடுப்பூசி மருந்தை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!
வைரஸின் மரபணு பகுத்தாய்வு செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியான 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதன் பின் ஆப்பிரிக்க பச்சை வகை குரங்கின் வைரசை இந்த தடுப்பூசி முழுமையாக அளித்தது குறிப்பிடத்தக்கது. குரங்கு மற்றும் எலி மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை நடைபெறவுள்ளது. இந்த தடுப்பு மருந்திற்கு ‘சாட் ஆக்ஸ் 1’ என பெயரிடப்பட்டுள்ளது.