ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விமான பயணிகள் கவனத்திற்கு!
அமீரகத்தின் குடியிருப்பு விசா பெற்ற இந்திய விமான பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கிடையாது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் :
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உலக சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அறிவித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பயணிகள் விமானத்தை ரத்து செய்தது.
மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் – மாநில அரசு வெளியீடு!
மற்ற நாடுகளை தொடர்ந்து அரபு அமீரகம் இந்திய பயணிகள் விமானத்தை ரத்து செய்து. கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தால் அதற்கான தடையை தொடர்ந்து நீட்டித்தது. அதன் பிறகு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அமீரகம் வர அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் இருந்து அமீரகம் வருகை தரும் குடியிருப்பு விசா பெற்ற இந்திய விமான பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கிடையாது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருகை புரியும் விமான பயணிகள்
https://smart.gdrfad.gov.ae/Smart_OTCServicesPortal/ReturnPermitService.aspx என்ற இணையதள முகவரியில் நுழைவுக்கான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். துபாயை தவிர்த்து மற்ற பகுதிகளில் விசா பெற்று அமீரகத்துக்குள் வருகை புரியும் விமான பயணிகள் கட்டாயம் மத்திய மற்றும் குடியுரிமை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். இந்திய பயணிகள் இந்திய விமான நிலையங்களில் எடுக்கப்படும் ரேபிட் கொரோனா பரிசோதனை முடிவுகளையும் கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.