பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது? தமிழக முதல்வர் விளக்கம்!!

1
பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது? தமிழக முதல்வர் விளக்கம்!!
பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது? தமிழக முதல்வர் விளக்கம்!!
பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது? தமிழக முதல்வர் விளக்கம்!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் செல்லுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் முடிவு எடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி போடும் பணிகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வருகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்று தான் தடுப்பூசிகளை பெறுவது. மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்று அதனை மக்களுக்கு விநியோகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் மத்திய அரசு 18 வயதினருக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இதனை அடுத்து அதனை செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆரம்பத்தில் பலரும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள தயக்கம் காட்டினர். பின்பு, மாநில அரசின் தொடர் அறிவுறுத்தலின் காரணமாக பலரும் தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருகின்றனர். அந்த வகையில் தற்போது பள்ளி குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதே போல் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மக்கள் இனி வரும் காலங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தடுப்பூசிபோட ரெம்பநாளாகுமே ,பள்ளிகளை திறந்துவிட்டு பின்னர் தடுப்பூசயை மெல்லமெல்ல போடலாமே, கொரானாவை தான் கட்டுபடுத்தியாட்சுல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!