தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி & மின்னலுடன் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வானிலை மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்பு
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பநிலை காரணமாக இன்று மற்றும் நாளை 10 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்டம், கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
அதே போல் நாளை தமிழகத்தின் சேலம், விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதே போல் குறைந்தபட்சமாக திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
- இன்று (04/07/2021) மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதே போல் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வரும் 7 ஆம் தேதி வரை 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மேற்குறிய பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.