உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு – இன்று மாலை பதவியேற்பு!!
உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவி ஏற்க உள்ளார். உட்கட்சி பூசல் ஏற்பட்டதை தொடர்ந்து பழைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகினார்.
புதிய முதல்வர் நியமனம்:
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் அதிருப்தியில் இருந்தனர். கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி மேலிடத்திற்கு புகார்கள் பல சென்றன.
TN Job “FB Group” Join Now
இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்ய உத்தரகண்ட் மாநிலத்திற்கு பாஜ தேசிய நிர்வாகிகளான பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதம், துணைத் தலைவர் ராமன் போன்றவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நிலைமை குறித்த ஆய்வுகளை செய்த அவர்கள் பாஜக மேலிடத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி உத்தரகண்ட் மாநிலத்தில் புதிய முதல்வர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
தமிழக அரசு தட்டச்சர் பணி பதவி உயர்வு – புதிய விதிகள் அமல்!!
அதனையொட்டி முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் டேராடூன் திரும்பிய அவர் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை மாநில ஆளுநர் ராணி மவுரியாவிடம் வழங்கினார். இந்நிலையில் உத்தரகண்டின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுக்க அந்த மாநில எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சைக்கிள், மடிக்கணினி – அரசுக்கு கோரிக்கை!!
புதிய முதல்வர் பட்டியலில் ஹரித்வார் எம்.பி., ரமேஷ் பொக்ரியால், நயினிடால் எம்.பி. அஜய் பட், மாநில சுற்றுலா அமைச்சர் சத்பால் மஹாராஜ், ராஜ்யச்பா எம்.பி. அனில் பலூனி, உயர் கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் போன்றவர்கள் இருந்தனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை – பட்டியல் தயாரிப்பு தீவிரம்!!
இவர்களில் தற்போது உத்தரகண்டின் அடுத்த முதல்வராக தீரத் சிங் ராவத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2013 முதல் 2015 வரை உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவராக இருந்த தீரத் சிங் ராவத் இன்று மாலை 4 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.