உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்துவர விமானங்கள் இயக்க அனுமதி – ஒன்றிய அரசு அறிவிப்பு!

0
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்துவர விமானங்கள் இயக்க அனுமதி - ஒன்றிய அரசு அறிவிப்பு!
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்துவர விமானங்கள் இயக்க அனுமதி - ஒன்றிய அரசு அறிவிப்பு!
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்துவர விமானங்கள் இயக்க அனுமதி – ஒன்றிய அரசு அறிவிப்பு!

ரஷ்யா – உக்ரைன் இடையே தற்போது போர் பதற்றம் குறைந்த நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். அதனால் இந்தியர்களுக்கு உதவியாக விமான நிலையத்தில் உள்ள தடைகள் தளர்த்தப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

விமான இயக்க அனுமதி

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனை தொடர்ந்து அடுத்த பேரிடியாக தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. அதனால் இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையே எந்த நேரத்திலும் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவதும், நேட்டோவில் இணைய முயற்சிப்பதும் ரஷ்யா நாட்டின் இறையான்மைக்கு எதிரானதாக கருதப்படுகிறது.

TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி அறிவிப்பு 2022 – தேர்வாணைய தலைவர் முக்கிய தகவல்!

அதனால் உக்ரைன் மீது படையெடுக்க லட்சக்கணக்கான வீரர்களை எல்லையில் குவித்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது போர் பதற்றம் குறைந்த நிலையில் எல்லையில் உள்ள வீரர்களையும் குறைத்து கொண்டு வருகிறது. அத்துடன் போர் ஒத்திகையும் முடிந்து விட்டதாகவும் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடு தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டு கொண்டுள்ளனர். அத்துடன் இந்தியர்கள் யாரும் இதனை தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்தியர்கள் தாயகத்திற்கு திரும்ப உள்ளனர் மக்கள் வெளியேற அங்கு உள்நாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்? ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!

தற்போது போர் பதற்றம் தணிந்த நிலையில் இந்தியர்கள் தாயகத்திற்கு திரும்ப உள்ளார்கள். ஆனால் உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்கு குறைவான அளவு விமானங்களை உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் இது குறித்து வெளியுறவுத்துறை கூறியதாவது, மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கூடுதல் விமானங்களை இயக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளது. அத்துடன் மாணவர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியர்கள் அனைவரும் தாயகம் செல்ல வசதியாக விமான நிலையத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!