TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி அறிவிப்பு 2022 – தேர்வாணைய தலைவர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணாமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. நிலைமையை சரி செய்ய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. அதே போல அனைத்து அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஒரு சில முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வருகிற 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதன் பின் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன் படி நாளை TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். அதனால் தேர்வர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாததால் பெரிய அளவிலான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அரசு பணி கிடைக்க வேண்டும் என பலரின் கனவு நினைவாக இருக்கிறது.