தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பீர் இலவசம் – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
அமெரிக்காவில் குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ்ச் அறிவித்துள்ளது.
பீர் இலவசம்:
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவிலிருந்து பரவ தொடங்கிய வைரஸ் உலகையே அச்சுறுத்துகிறது. மக்கள் உயிர் பயத்தால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இது ஒரு தொற்று நோயாக இருப்பதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மின்னல் வேகத்தில் பரவுகிறது. இதனால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் பரவ தொடங்கிய வைரஸ் இன்று வரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் அமெரிக்கா அதிக உயிரிழப்புகளை சந்தித்தது. கொரோனா பரவல் அங்கு தான் அதிகமாக இருந்தது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாடர்னா, பைசர், பயோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 29,69,12,892 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதில் இதுவரை 16,87,34,435 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 13,61,55,250 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஜூன் 5 முதல் கூடுதல் அரிசி விநியோகம் – மத்திய அரசு!!
ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை ஜனாதிபதி பைடன் அரசு நிர்ணயித்து உள்ளது. ஆனால் தற்போது 63 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ்ச் இந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.