குறையும் வேலையின்மை விகிதம்.. மீண்டு வரும் பொருளாதாரம் – நிபுணர்கள் தகவல்!
கொரோனா கால கட்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்து உள்ளதாக தேசியப் புள்ளியியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
வேலை வாய்ப்பின்மை
கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தன. அத்துடன் அரசிற்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையால் கூடுதல் செலவீனம் ஏற்பட்டு நிதி நெருக்கடி நிலை உருவானது. அதன் காரணமாக வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது கொரோனா பரவல் தடுப்பூசி மருந்துகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அதன்படி தற்போது வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் கடந்த ஜூன் மாத காலாண்டில் நகர்புறத்தில் இருக்கும் 15 வயது மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 7.6 சதவீதமாக இருந்தது.
தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தற்போது உலக நாடுகள் கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு வரும் சூழலில் வேலை வாய்ப்பின்மை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்றும் அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் காலாண்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.2 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பொருளாதாரம் மீட்சி அடைவதை உறுதி செய்ய முடிகிறது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.