UPSC 400 காலிப்பணியிடங்கள் – பெண்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது NDA மற்றும் NA ஆகிய பணிகளுக்காக தேர்வு அறிவிப்பினை கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்டது. அதில் கடற்படை அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II ஆகிய பணிகளுக்கு என 400 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC NDA & NA தேர்வு விவரங்கள்:
- விண்ணப்பதாரர்கள் 02.01.2003 முதல் 01.01.2006 அன்று வரை உள்ள இடைப்பட்ட திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
- 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதார்கள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற இரண்டு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
- பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
- SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் தேவையில்லை
- பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வானது வரும் 05.09.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 29.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் 08.10.2021 அன்று வரை பெண்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியா பெண் விண்ணப்பதாரிகள் உடனே பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.