UPSC மத்திய ஆயுத போலீஸ் படையில் வேலை – உடனே விரையுங்கள்..!
யூனியன் பொது சேவை ஆணையமானது மத்திய ஆயுத போலீஸ் படையில் (CAPF) உதவி கமாண்டண்டுகள் (ஏசி) பதவிக்கு 253 காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான UPSC CAPF (ஏசி) 2022 வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
UPSC CAPF வேலைவாய்ப்பு விவரங்கள்:
- BSF பிரிவில் 66 பணியிடம், CRPF பிரிவில் 29 பணியிடம், CISF பிரிவில் 62 பணியிடம், ITBP பிரிவில் 14 பணியிடம், மற்றும் SSB பிரிவில் 82 பணியிடம் என மொத்தமாக இந்த ஆண்டு, சிஏபிஎப்களில் 253 உதவி கமாண்டன்ட் பதவிகள் நிரப்பப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
- UPSC CAPF AC 2022 க்கு, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இதுபோன்ற தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
- ஆகஸ்ட் 1, 2022 அன்று விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், வயதானது அதிகபட்சம் 20 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 2, 1997க்கு முன்னதாகவும், 1 ஆகஸ்ட் 2002 க்குப் பிறகு பிறந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
- SC/ST/ பெண் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் ஏதும் இல்லை
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ.200/-
- Written Test, Physical Standard Test / Physical Efficiency Test , Medical Examination மற்றும் Interview ஆகிய படிநிலைகளின் மூலம் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
UPSC CAPF விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி 10.05.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.