சன் டிவி ‘சுந்தரி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கார்த்திக் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட மல்லிகா!
சன் டிவியில் தொடங்கப்பட்டதில் இருந்து டாப் வரிசையில் இருக்கும் “சுந்தரி” சீரியலில் தற்போது சுந்தரி கார்த்திக் பற்றிய ரகசியம் அனுவின் அம்மா மல்லிகாவிற்கு தெரிந்துவிட்டது. அதனால் அவர் கொடுத்த ஷாக்கை பார்த்து கார்த்திக் அதிர்ச்சி அடைகிறார்.
சுந்தரி சீரியல்:
சின்னத்திரையில் பல முன்னணி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் பல புதுமையான கன்டென்ட் உடன் பிரபலமான பல சீரியல்கள் இருக்கின்றனர். அந்த சீரியல்களுடன் போட்டி போட்டு முதலிடத்தை பிடிப்பது என்பது சாதாரண ஒன்றாக இல்லை. அந்த வகையில் சன் டிவியில் தொடங்கப்பட்ட சில மாதங்களில் TRPயில் முதலிடத்தை பிடித்த சீரியல் தான் சுந்தரி சீரியல். இந்த சீரியலின் நாயகியாக டிக்டாக் புகழ் கேப்ரியல்லா நடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
மேலும் சுந்தரியின் கணவர் கார்த்திக் கதாபாத்திரத்தில் ஜிஷ்ணு மேனன் நடித்து வருகிறார். அவரது இரண்டாவது மனைவி அனு கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நீலநாத் என்பவரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பாக இருப்பதால் சுந்தரியை கார்த்திக் பிடிக்காமல் திருமணம் செய்து கொள்ள அவருடன் வாழாமல் அனு உடன் வாழவே அவர் விருப்பப்படுகிறார். சுந்தரிக்கு விஷயம் தெரிந்தும் கூட அதை அனுவிடம் சொல்லாமல் இருக்க தன்னுடைய எதிர்காலம் தான் முக்கியம் என அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
காதலில் விழுந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் – அதுவும் “ராஜா ராணி 2” நடிகை உடனா? ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் இதுவரை சுந்தரி கார்த்திக் மட்டும் தெரிந்த விஷயம் தற்போது அனுவின் அம்மா மல்லிகாவிற்கும் தெரிந்துள்ளது. மல்லிகா சுந்தரியின் தியாகத்தை மதித்து, அவருக்கு தனது நிறுவனத்தில் சிஇஓவாக பதவி உயர்வு அளிக்கிறார். ஆனால் கார்த்திகிற்கு இது பிடிக்காமல் இருக்கிறது. சுந்தரியை சிஇஓ போஸ்டிக்கு தேவையில்லை என சொல்ல வைக்கிறார். இது பற்றி சுந்தரி வீட்டிற்கு சென்று மல்லிகா பேச சுந்தரியின் கணவருக்கு தான் இதில் விருப்பம் இல்லை என சொல்கிறார், அதனால் மல்லிகா சுந்தரி கணவருக்கு போன் செய்ய கார்த்திக் என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.