‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – லட்சுமி அம்மா இறப்பிற்கு அடுத்த எபிசோடுகள்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் திருமணம் முடிந்ததில் இருந்து ஒரே அழுகை காட்சிகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கோவிலுக்கு செல்ல இருப்பதாக திட்டமிட்டுள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வார TRPயில் முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், லட்சுமி அம்மா இறந்து விட்டதால் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க அம்மா இறப்பிற்கு கண்ணன் தான் காரணம் என ஊர் மக்கள் அனைவரும் பேசுகின்றனர். இதனை பொறுத்துக் கொண்டு எதுவும் பேசாமல் கண்ணன் இருக்கிறார். மறுபக்கம் குடும்பத்தினர் அனைவரும் பழைய நிலைக்கு திரும்ப முயற்சி செய்து வருகின்றனர்.
அக்.20ம் தேதி வரை பள்ளியை மூட உத்தரவு – 60 மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி!
இப்படி இருக்க இன்றைய எபிசோடில் முல்லையின் அப்பா வந்து குலதெய்வ கோவிலுக்கு சென்று படையல் போட வேண்டும் என முல்லையின் அம்மா பார்வதி சொன்னதாக சொல்கிறார். தனத்தின் அம்மாவும் ஆமாம் நானும் சொல்ல வேண்டும் என நினைத்தேன் என சொல்ல, நாளைக்கு நல்ல நாளாக இருக்கிறது என சொல்கிறார். உடனே மீனா என் வீட்டில் இருப்பவர்களை கூப்பிடவா என கேட்க, சரி என தனம் சொல்கிறார். அனைவரும் வர வேண்டும் என தனம் சொல்ல அப்போ கண்ணன் என மீனா கேட்கிறார்.
8ம் வகுப்பு முதல் அக்.4ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அவனையும் அழைக்க வேண்டும் என தனம் சொல்ல, மீனா அவரது அப்பாவிற்கு போன் செய்து நாளைக்கு கோவிலுக்கு வர சொல்கிறார். அப்படியே கண்ணனை கூப்பிடும் படி சொல்கிறார். கண்ணனிடம் அவர் விவரத்தை சொல்கிறார். இந்நிலையில் சில வாரமாக அழுகை காட்சிகளாக எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரும் குடும்பத்துடன் இணைந்து கோவிலுக்கு செல்ல இருக்கின்றனர். இது குறித்த படபிடிப்புத்தள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.