8ம் வகுப்பு முதல் அக்.4ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு வருகிற அக்டோபர் 4ம் தேதி 8ம் வகுப்பு முதல் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதனால் நோய்த்தொற்று சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளை திறக்க திட்டமிடப்பட்டது. அதனபடி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது மும்பையில் பள்ளிகள் 8 முதல் 12 வகுப்புகளுக்கு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி அக்டோபர் 4, 2021 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: இன்று செப்-30 பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இதற்காக பள்ளி நிர்வாகங்கள் தங்களை நன்றாக தயார்படுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கற்பித்தல் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் மாணவர்களின் தேவைக்கேற்ப மட்டுமே பள்ளிகளுக்கு வர வேண்டும். தடுப்பூசி மையங்களாக இருந்த பள்ளிகள் நன்றாக சுத்திகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, தடுப்பூசி மையங்களை இடமாற்றம் செய்து பிற இடங்களில் பயன்படுத்தக்கூடிய நிலையில் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளை (அக்.1) முதல் அரசு பேருந்துகள் இயக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அனைத்து SOP கள் மற்றும் வழிகாட்டுதல்களின் நகல் மும்பை பள்ளிகளுக்கு தனித்தனியாக அனுப்பப்படும். இந்த வழிகாட்டுதல்களைத் தவிர, மாணவர்கள், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக கல்வி நிறுவனத்தின் உள்கட்டமைப்புத் திறனுக்கு ஏற்ப ஆஃப்லைன் வகுப்புகள் படிப்படியாக மீண்டும் தொடங்க வேண்டும்.