அக்.20ம் தேதி வரை பள்ளியை மூட உத்தரவு – 60 மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரத்தில் செயல்பட்டு வரும் ஒரு குடியிருப்பு பள்ளியை சேர்ந்த சுமார் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பள்ளிக்கு அக்டோபர் 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு விடுமுறை
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலை பரவல் குறைந்து வருவதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் வெளியிட்டுள்ள முறையான கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
8ம் வகுப்பு முதல் அக்.4ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அந்த வகையில் பெங்களூரு மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பள்ளியை சேர்ந்த 60 மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இந்த பள்ளியில் 60 பேருக்கு கொரோனா தொற்று செய்த பிறகு, அக்டோபர் 20ம் தேதி வரை அந்த பள்ளியை மூடும்படிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று அறிகுறி இருக்கும் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாணவர்களும் சரியான மருத்துவ வசதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட ஆட்சியாளர் ஜே மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்று செப்-30 பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இந்த மாணவர்களுக்கு ஏழாவது நாளில் மறு பரிசோதனை நடத்த இருப்பதாகவும், அக்டோபர் 20 வரை பள்ளி மூடப்பட்டிருப்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 14 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கர்நாடகா அரசு சமீபத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்தது. அதன் கீழ் நேர்மறை விகிதம் 2%க்கும் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன.