தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் – வாரியம் உத்தரவு!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் - வாரியம் உத்தரவு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் - வாரியம் உத்தரவு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் – வாரியம் உத்தரவு!

தமிழகத்தில் மே மாதம் 5ம் தேதி முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட இருக்கும் நிலையில், தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்வாரியம் உத்தரவு:

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பேரலைத்தொற்று ஏற்படுத்திய தாக்கத்திற்கு மத்தியில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு வரும் மே மாதம் 5ம் தேதி முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மின்தட்டுப்பாடு காணப்பட்டு வருவதால் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், மே 5ம் தேதி முதல் தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்காக மின்சார வாரியம் மூலம் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, தேர்வு நடைபெறும் மையங்களில் மின்பாதைகள் குறித்து பொறியாளர்கள் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். இதில் மின்தடை ஏற்படுவதற்கான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

வங்கிகளுக்கு மே மாத விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மேலும் தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றிகளை ஆய்வு செய்து, பழுதுகளை நீக்கி மாற்று ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தப்படுகிறது. அந்த வகையில் தேர்வு முடியும் வரைக்கும் மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், தமிழகம் முழுவதும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் தேர்வு எழுதும் மாணவர்கள் இதன் மூலம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மின்சார வாரியம் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!