நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை – மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறையை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கல்விமுறை:
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்சி மற்றும் மாநில வாரிய பாடத்திட்டங்கள் என்கிற பல்வேறு வகையான பள்ளிக் கல்வி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு பள்ளிகளில் மாணவர்களுக்கு வெவ்வேறு முறைகளில் பாடங்கள் கற்பிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கல்வித்திறன் மாறுபடுகிறது. அதாவது, சிபிஎஸ்சி கல்வி முறையின் அடிப்படையில் பயின்ற பள்ளி மாணவர்களுக்கு மாநில வாரிய பாடத்திட்டங்களின் படி பயின்ற மாணவர்களை காட்டிலும் கூடுதல் கல்வித் திறன் இருக்கிறது.
டெல்லியில் சிறப்புப் பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான திறனறிவு தேர்வு – ஜூலை 20 முதல் தொடக்கம்!
அதாவது, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கல்லூரி பாடத்திட்டத்திற்கு இணையாக பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இதனால், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை நடத்த முடிவதில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே பள்ளி கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.