ஆதார் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு !
மத்திய அரசின் ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக பணியிட அழைப்பு முன்னதாக வெளியானது. அங்கு Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு என 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
ஆதார் துறை பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் அதிகாரியாக பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
அவற்றுடன் பணியில் 3 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்கிறோம்.