ஆதார் அட்டை மறுபதிவு சேவை நிறுத்தம் – UIDAI அறிவிப்பு!!
நாடு முழுவதும் உள்ள குடிமகனுக்கு தேவையான முக்கிய ஆவணமான ஆதார் அட்டையை தவற விட்டால் அதனை மீண்டும் பெற மறுபதிவு செய்யும் சேவையை UIDAI நிறுத்தியுள்ளது.
UIDAI அறிவிப்பு:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைதாரர்களுக்கு முகவரி, பயோமெட்ரிக்ஸ், புகைப்படம் மற்றும் மொபைல் எண் புதுப்பிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளுக்கான புதிய அறிவிப்புகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
ஆதார் அட்டை இந்திய முழுவதும் உள்ள மாநிங்களில் வழங்கப்படும் நல திட்டங்களை பெற முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆவணம் உங்களிடம் இல்லாவிட்டால் எந்தவொரு மாநில திட்டத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.ஆர்டர் ஆதார் மறுபதிப்பு சேவை நிறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் சரிவு – RBI அறிக்கை!!
ஏற்கனவே ஆதார் அட்டையை தொலைத்துவிட்டால் UIDAI இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் அது முடியாது. காரணம் அந்த சேவையை UIDAI நிறுத்திவிட்டது. UIDAI தற்போது பி.வி.சி வடிவத்தில் ஆதார் அட்டைகளை தயாரிக்கிறது, அவை டெபிட் கார்டின் அதே அளவு மற்றும் உங்கள் பாக்கெட் அல்லது பணப்பையில் எளிதாக எடுத்துச் செல்லலாம். ஆதார் அட்டைகள் பெரிதாக இருப்பதால் UIDAI அச்சிடுவதை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களுக்கு புதிய ஆதார் அட்டை தேவைப்பட்டால், நீங்கள் பி.வி.சி ஆதார் அட்டையை ஆர்டர் செய்யலாம்.