முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை- தளர்வுகள் அளித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!
இளநிலையில் இருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறுவதில் தளர்வுகள் அளித்து தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை UGC வெளியிட்டுள்ளது. அது பற்றிய விவரங்களை இப்பதிவில் காணலாம்.
யுஜிசி-யின் அறிவிப்பு:
யு.ஜி.சி-யின் (Univeristy Grants Commission) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் தற்போது முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் இளநிலையில் இருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற யுஜிசி அனுமதி பெற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தொடர்ந்து 2 ஆண்டுகள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறும் நபர், முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – தொல்லியல் துறை அறிவிப்பு!
Follow our Twitter Page for More Latest News Updates
பின்னர் கண்காணிப்பாளர், துறைத் தலைவர் மற்றும் வெளியில் இருந்து பாட நிபுணர் ஒருவர் என மூவர் அடங்கிய குழு ஒன்று உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் ஆராய்ச்சியை மதிப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த குழு ஆராய்ச்சியை மதிப்பீடு செய்த பின்னர், அது தொடர்பான பரிந்துரைகளை யுஜிசிக்கு முறையாக அனுப்பி வைக்க வேண்டும். அதுவே போதுமானது. பின்னர் விண்ணப்பித்தவர் முதுநிலை உதவித் தொகை பெற தகுதி பெற்றவர் ஆவார். இதற்கு யுஜிசி ஒப்புதல் அளிப்பது கட்டாயமில்லை என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.