மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – தொல்லியல் துறை அறிவிப்பு!

0
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – தொல்லியல் துறை அறிவிப்பு!

நடப்பு ஆண்டு சென்னையில் ஜி – 20 மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு தடை:

சர்வதேச ஜி- 20 மாநாடு நடத்தும் தலைமை பொறுப்பு இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் நாளை முதல் ஜி – 20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

இதனையடுத்து புதுச்சேரி நகரம் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு இன்று முதல் அமலாகியுள்ளது. அதனை தொடர்ந்து சென்னையில் ஜி – 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் துவக்க நிலை மாநாடு மாமல்லபுரத்தில் ஜன . 31 மற்றும் பிப். 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

திரும்ப பெறப்படும் பென்ஷன் தொகை.. ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – அரசு நடவடிக்கை!

இந்த ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மாமல்லபுரத்தை பார்வையிட உள்ளனர். இதனையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற பொதுமக்கள் செல்ல பிப். 1 ம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!