தனியார் மயமாக்கப்படும் இரண்டு வங்கிகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
2021-22 ஆம் நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவ்வாறு தனியார்மயமாக்கப்படும் இரண்டு வங்கிகளின் விவரங்கள் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
வங்கிகள் தனியார் மயமாக்கல்:
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்டு அதன் மூலம் நிலுவைத் தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்தது. இதற்காக வங்கிகளை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
ஜூன் 29 சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பின் படி, இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று. மற்றொரு வங்கி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து நிதி ஆயோக்கியின் பரிந்துரை குறித்து உயர்நிலை குழு ஆலோசித்து வருகிறது. அந்த குழு முடிவு செய்த பின்னர் பிரதமர் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தால் இரு வங்கிகளும் தனியார்மயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் அதன் ஊழியர்களின் நலனை பாதுகாப்பது பற்றியும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.