ஜூன் 29 சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜூன் 29 அன்று மின் தடை செய்யப்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிக மின்வெட்டு ஏற்படுகிறது. திமுக ஆட்சியில் தடையில்லா மின் விநியோகம் செய்யப்படும் மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மின் தடை மட்டுமே அதிகமாக உள்ளது பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே மின் தடை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
PF சலுகை 2021 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சகம்!
கடந்த 9 மாத காலமாக அதிமுக ஆட்சியில் மின் கம்பங்கள் பழுது பார்க்கவில்லை, மின் சாதன உறுதி பாகங்கள் மாற்றப்படவில்லை. அதனால் நாங்கள் இப்போது மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என கூறினார். ஏற்கனவே சென்னையில் பகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை பட்டாபிராம், கக்கஞ்சி நகர், பாபு நகர், சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
மேலும் புழல் பகுதி, பாபா நகர், அழகிரி தெரு,தண்டல்கழனி, சாமியார் மடம், வடகரை, சொத்துபேரும் மேடு, இந்திரா நகர், லட்சுமி நகர், பாரதி நகர், உல்லாச நகர், அருமந்தி, திருநீலை, அங்காடு, புதூர், கணபதி நகர், திருவள்ளூர் தெரு பிருந்தாவன் நகர், பாலாஜி நகர், மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (29.06.2021) செவ்வாய் கிழமை அன்று மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.