அடுத்த ஆப்பு இந்தியாக்கு தானா? எலான் மஸ்க் போட்ட ட்விட்.. ஷாக் ஆன நெட்டிசன்கள்!
ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் பெறும் நடைமுறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு எப்போது ப்ளூ டிக் பிரீமியம் சேவை கிடைக்கும் என்ற கேள்விக்கு மஸ்க் பதில் அழித்துள்ளார்.
ப்ளூ டிக்:
உலகம் முழுவதும் பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை தங்கள் கருத்துக்களை பகிர உதவியாக இருக்கும் ட்விட்டர் செயலி தற்போது பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. முன்னதாக பயனரின் கணக்கு சோதிக்கப்பட்டு, அது சரியானது என்று ப்ளூ டிக் அடையாளம் கொடுப்பதற்கு 4 டாலர்கள் சந்தாவாக வசூலிக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் இதற்கு மஸ்க் 20 டாலர்கள் நிர்ணயிக்க உள்ளதாக தெரிவித்தார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால், 20 டாலர் என்பது ஒரு ப்ளூ டிக்கிற்கு அதிகபட்ச கட்டணம் என்று கிளம்பிய எதிர்ப்புகளினால் இதை 8 டாலராக மாற்றிக் கொள்ளலாமா என்று மஸ்க் சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவர், “இந்தியாவில் ட்விட்டர் புளூ டிக் பிரீமியம் சேவையை எப்போது எதிர்பார்க்கலாம்?” என்று மஸ்கிடம் கேட்டிருந்தார்.
தமிழகத்தின் இன்று இந்த 18 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!
Exams Daily Mobile App Download
அதற்கு பதில் அளித்த மஸ்க் ட்விட்டர் புளூ டிக் பிரீமியம் சேவை தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் iOS இல் கிடைப்பதாகவும், இந்தியாவிற்கு இன்னும் 1 மாதத்திற்குள் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்தியாவில் பயன்படுத்தப்படும் முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். இந்நிலையில் மஸ்கின் இந்த அறிவிப்பு இந்திய நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.