தமிழக தனியார் பள்ளிகள் மீதான கல்வி கட்டண புகார் – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் தெரிவிக்க பள்ளி கல்வித்துறை இலவச உதவி மைய எண்ணை வெளியிட்டுள்ளது. மேலும் புகார் தெரிவிக்கும் பெற்றோர்களின் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகள் அனைத்தும் 75% கல்வி கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப பதிவு எப்போது?
மேலும் பேருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பெற்றோர்களை முழு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் சில பள்ளிகள் வசூல் செய்வதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தனியார் பள்ளிகள் மீதான கல்வி கட்டண புகார் தெரிவிக்க 14417 என்ற இலவச உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்வி துறைக்கு வரும் புகார்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் முதற்கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் மேலும் தனியார் பள்ளிகள் தவறு செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் பெற்றோர்களின் விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RTE SITE INNUM OPEN AGALA. PLZ HELP