திருப்பதி கோவில் தரிசன முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் அறிவிப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்காக முன்பதிவு செய்தவர்களுக்காக தேவஸ்தானம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக வேகத்தில் காட்டுத்தீயைப் போல் பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துகளுக்கு அரசுகள் தடை விதித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களுக்கு மட்டும் அவசர தேவைகளுக்காக ரயில் சேவை இயக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்றின் அச்சம் உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கு தயங்குகின்றனர். இதனால் தொற்றின் பரவல் சங்கிலி முறிந்து விடும். மேலும், பல முக்கிய தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ-பாஸ் அப்ளை செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ரூ.300 பணம் செலுத்தி சிறப்பு தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் ஊரடங்கினால் தற்போது வர இயலாது. அவர்கள் அனைவரும் தரிசனத்திற்கு வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.