டிப்ளமோ போதும், தமிழக அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புநர்கள் மற்றும் நுண்கதிர் வீச்சாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் தற்போது நிலவும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், மக்களின் நலன் கருதியும் பணிகளை மேற்கொள்ள காலிப்பணியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தாளுனர்கள் 15, பணியிடம் ஆய்வக நுட்புநர்கள் 15 மற்றும் நுண்கதிர் வீச்சாளர் 15 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து பணியிடங்களும் 6 மாதங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? கி.வீரமணி வலியுறுத்தல்!
நேரடியாக இந்த பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊதியமாக மாதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அனைத்து பணியிடங்களுக்கும் அந்தந்த பிரிவில் டிப்ளமோ படித்திருந்தால் போதுமானது. இதில் ஆர்வம் இருப்பவர்கள் வரும் 29 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பங்களை அனுப்ப எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான நேர்காணல் வரும் ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, இணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம் 4, வ.உ.சி ரோடு ரோசன் மஹால் மத்திய பேருந்து நிலையம், திருச்சி 620001.