தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இனிமேல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பேருந்துகள்:
தமிழகத்தில் சென்ற ஆண்டு ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தங்கள் தேர்தல் வாக்கு உறுதியில் பொது மக்களுக்கு பல நன்மையான திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தது. அதில் முக்கியமாக, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டமும் உள்ளது. மேலும் இந்த திட்டத்தை திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் முதலில் கையெழுத்து போட திட்டமும் இது தான். மேலும் தமிழகத்தில் உள்ள மகளிர் அனைத்தும் உள்ளுர் பேருந்துகளில் இலவசமாக பயணித்து கொள்ளலாம் என்றும் கூறி இருந்தனர். மேலும் இத்திட்டத்தின் மூலம் கிராமம், நகரம், பெருநகரம் என நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.
10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விரைவில் தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்த நிலையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், தமிழகத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வழித்தடங்களில் சோதனை நடத்தி, படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இது போன்ற செயல்களை தொடர்ந்து நடைபெற்று வந்தால் மாணவர்கள் மீது தகுந்த வழக்குகள் பதியப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் என்று முன்னரே எச்சரித்துள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பிள்ளைகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு போன்று மாணவர்களின் விபத்தில்லா பாதுகாப்பான பயணம் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், புதிய பேருந்துகள் வாங்கும் போது தானியங்கி கதவுடன் வாங்க திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.