இந்தியாவில் திருநங்கைகளுக்கு சுகாதார திட்டம் – மத்திய அரசு ஒப்பந்தம்!
இந்தியாவில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திருநங்கைகளுக்கு சுகாதாரத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு திட்டம்:
திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது. ஆணாக பிறந்து ஹார்மோன் மாற்றத்தால் தன்னை பெண்ணாக உணர்ந்து பெண்ணாக மாற அவர்கள் ஏராளனமான கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். நாடு முழுவதும் பல குடும்பங்களில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதனால் பல திருநங்கைகள் பிச்சை எடுக்கவும் தவறான தொழில் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் அரசு திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்து, கல்வி, வாக்காளர் அட்டை, மேலும் அரசு தேர்வுகளில் வாய்ப்பு ஆகியவற்றை வழங்கி வருகிறது. அதனால் பல திருநங்கைகள் அரசு தொழிலில் நல்ல இடத்தில் இருக்கின்றனர். மேலும் திருநங்கைகளின் வாழ்க்கைக்கு தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Wipro நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சம்பளம் & பதவி உயர்வு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கவும், பொருளாதாரம் மற்றும் சமுகரீதியில் அவர்களை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு திருநங்கைகளுக்கு சுகாதாரத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்