Wipro நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சம்பளம் & பதவி உயர்வு அறிவிப்பு!

0
Wipro நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - சம்பளம் & பதவி உயர்வு அறிவிப்பு!
Wipro நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சம்பளம் & பதவி உயர்வு அறிவிப்பு!

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி செப்டம்பரில் விப்ரோ நிறுவனம் தனது பெரும்பாலான ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு வழங்க முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பள உயர்வு அறிவிப்பானது நடுத்தர நிர்வாகம் வரையில் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பள உயர்வு, பதவி உயர்வு:

கடந்த சில நாட்களாக ஐடி நிறுவனங்களில் இருந்து ஏராளமான ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் திறமையான ஊழியர்களை தக்கவைப்பதற்காக பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், விடுமுறை என நிறைய சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்சிஎல் ஆகிய முக்கிய நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைப்பதற்காக சலுகைகளை அறிவித்துள்ளன. மேலும் விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் சம்பள உயர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு வழங்கி வருகிறது. மேலும், புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

அதாவது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக, தொடர்ந்து அட்ரிஷன் விகிதத்தினால் மோசமான தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க ஊழியர்களுக்கு, காலாண்டுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு என சமீபத்தில் அறிவித்தது. இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியான அறிக்கையில், விப்ரோவின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான முந்தைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வெற்றிகரமாக முதல் காலாண்டினை முடித்துள்ளோம். இருப்பினும் மாறக்கூடிய ஊதியத்தின் அளவு குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை என மெயிலில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை BE பொது பிரிவு கலந்தாய்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!

Exams Daily Mobile App Download

மறுபுறம் மற்றொரு அறிக்கையில் விப்ரோவின் வேரியபிள் பே காரணமாக மார்ஜின் அழுத்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 18.8% ஆக இருந்த மார்ஜின் விகிதம், நடப்பு ஆண்டில் 15% ஆக குறைந்துள்ளது. கொரோனாவின் வருகைக்கு பிறகு விப்ரோவில் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த காலகட்டத்தில் நிறுவனம் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டது. அட்ரிஷன் விகிதத்தினை குறைக்கவும், ஊழியர்களை தக்கவைத்து கொள்ளவும், ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வை வழங்க உள்ளதாக அறிவித்தது. அதன்படி செப்டம்பரில் பெரும்பாலான ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வை வழங்க திட்டமிட்மிட்டுள்ளதாகவும், சிறப்பான செயல் திறனை காட்டுபவர்களுக்கு 15% மேலாகவும் சம்பள உயர்வினை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!