தமிழக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

0
தமிழக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
தமிழக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
தமிழக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு பிப்ரவரி 16ம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக சில நாட்களுக்கு இந்த கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது.

கலந்தாய்வு ஒத்திவைப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்தது. அதன்படி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!

ஆனால் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருப்பதால் இந்த கலந்தாய்வை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டது. அதனால் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி இதில் பிப்ரவரி 25ம் தேதியில் நடக்க இருந்த கலந்தாய்வு 24ம் தேதிக்கும், மார்ச் 4ம் தேதி அன்று உள்ள கலந்தாய்வு பிப்ரவரி 25ம் தேதிக்கும், மார்ச் 5ம் தேதி கலந்தாய்வு பிப்ரவரி 28ம் தேதிக்கும் மற்றும் மார்ச் 7ம் தேதி கலந்தாய்வு மார்ச் 2ம் தேதிக்கும் என மாற்றப்பட்டது.

TNPSC Group 2 அறிவிப்பு 2022 – ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை..!

இதில் பிப்ரவரி 16, 17ம் தேதிகளில் உள்ள கலந்தாய்வில் எந்தவித மாற்றமும் இன்றி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் ‘எமிஸ்’ இணையதளத்தில் ஏற்பட்ட சர்வர் பிரச்சனையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சர்வர் பிரச்சனை முடிந்த பிறகு நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் வருகிற 19ம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் இந்த கலந்தாய்வு பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!