தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு குறித்த நாட்கள் வெளியான நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசாணை வெளியாகி இருக்கிறது.
புதிய அரசாணை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கி இருந்த போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அணைத்து வகை ஆசிரியர்கள் பணி நிரவல் / பணி மாறுதல்/ மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசு கட்டிடத்தில் ஏற்றப்பட்ட ரஷ்ய தேசிய கொடி – நிலையை தீவிரமாக்கும் குண்டு மழை!
அந்த கலந்தாய்வின் போது மலைப்பாங்கான இடங்களின் உள்ள பள்ளிகளுக்கு அரசாணை நிலை எண் 404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள் 25.05.1995ன் படி மலைசுழற்சி மாறுதல்களை இவ்வரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி அந்த பதவிகளுக்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ள அந்தந்த நாட்களுக்கு முன்னர் மாறுதல் வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் உரிய இணையவழி கலந்தாய்வினை நடத்திடவும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNSPC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – மார்ச் 2 முதல் பயிற்சி வகுப்புகள்!
இவ்வியக்க செயல்முறைகள் 11.01.2022க்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலைசுழற்சி முறை பின்பற்றபடும் ஒன்றியங்களுக்குள் மட்டும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு அட்டவணையில் உள்ளவாறு இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் 25.02.2022 முதல் நடைபெறும் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.