முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் – கொரோனா பரவல் எதிரொலி!
கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதியில் உள்ள பல சுற்றுலா தலங்கள் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சுற்றுலா தலம்:
கேரளா மாநிலத்தில் கொரோனா பதிப்பின் 2ம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கொரோனா 2ம் அலை பாதிப்பு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தில் தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்களும் இயங்க அரசுகள் அனுமதி அளித்துள்ளது.
சாலைகளை சேதப்படுத்திய புகாரில் ரிலையன்ஸ்,ஏர்டெல் – மாநில அரசு அபராதம்!
ஆனால் கேரளா மாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தகுந்த பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறிகள் உள்ள நபர்கள் தனிமைப்படுத்தலில் வைக்க அரசு அறிவித்துள்ளது. ஆனால் கேரளா மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பினும், சர்வதேச சுற்றுலா தல அங்கீகாரம் பெற்ற மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா மற்றும் தேக்கடி இந்த பகுதிகளில் மட்டும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இடுக்கி மாவட்டத்தின் டிடிபிசி., (DISTRICT TOURISM PEROMOTION COUNCIL) கட்டுப்பாட்டில் இயங்கும் வாகமண், அருவிக்குழி, ராமக்கல்மேடு, ஆமைப்பாறை, கால்வரி மவுண்ட், மொட்டக்குன்று, ராமக்கல்மேடு ஆகிய சுற்றுலா தலங்கள் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது. எந்த முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளதால் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.