சாலைகளை சேதப்படுத்திய புகாரில் ரிலையன்ஸ்,ஏர்டெல் – மாநில அரசு அபராதம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் சாலைகளை சேதப்படுத்தியதாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு:
இந்தியாவின் தொலைத் தொடர்பு தொலைபேசிப் பயனர்களின் மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் இணையமாக விளங்குகிறது.பெரும் தொலைபேசி நிறுவனங்களாலும் அவற்றிற்கிடையேயான கடும் போட்டியாலும் உலகிலேயே மிகக் குறைந்த அழைப்புக் கட்டணங்களைக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. தொலைபேசி, இணையச்சேவை இரண்டும் இந்தியத் தொலைதொடர்புத் துறையின் முதன்மை அங்கங்களாக உள்ளன.
தமிழகத்தில் இன்று 1,580 பேருக்கு கொரோனா உறுதி; சற்று குறைந்துள்ள பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
தற்போதைய தகவலின் படி அனைவரும் 4ஜி அலைவரிசையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அடுத்த கட்டமாக 5ஜி தொழில்நுட்பம் மீதான ஆய்வுகள் மற்றும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் இணைப்புகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதி வேக இணையம் மற்றும் இணைப்புகளை வழங்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இது போன்ற சூழ்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் புதை மின் வட இணைப்புச் சாலைகளை சேதப்புத்தியதாகப் புகார் எழுந்த நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு அபராதத் தொகை செலுத்தாவிடில், நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.