நாளை 71,000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் – பிரதமர் மோடி வழங்கல்!
பாரத பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு நாளை ரோஸ்கர் மேளா மூலமாக வேலைவாய்ப்புகளுக்கான கடிதங்களை வழங்க இருக்கிறார்.
வேலைவாய்ப்பு:
நாடு முழுவதும் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை தேடி அலைந்து வருகின்றனர். தகுதிக்கேற்ப வேலை என்பது தற்போதைய சூழ்நிலையில் கனவாக மாறி உள்ள நிலை உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ரோஜர் மேளா மூலம் பலருக்கும் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி – 26ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கம்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், நாளை நடக்க உள்ள ரோஜர் மேளா நிகழ்ச்சியில் 71,000 நபர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் வேலைக்கான கடிதங்களை வழங்க இருக்கிறார். குஜராத் மற்றும் ஹிமாச்சலில் தேர்தல் நெருங்க உள்ளதால், நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் அப்பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பணிக்கான நகல் ஆணை வழங்கப்படும். பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளிலும், மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், லோயர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர், வருமான வரி ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மருந்தாளுனர்கள் போன்ற பல பணியிடங்களுக்கான பணி நியமனம் நாளை வழங்கப்பட இருக்கிறது.