தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி – 26ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை சிறப்பாக எழுத அவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் படி வரும் 26ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது.
பயிற்சி வகுப்பு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நுழைவுத் தேர்வானது ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடிசா , பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் கடந்த வருடங்களில் தமிழகத்தில் இருந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வெழுதிய மாணவர்கள் தோல்வியுற்று மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தனர். இது போன்ற நிகழ்வுகளை தடுக்கவே நீட் தேர்வில் விலக்கு வேண்டும் அரசு போராடி வருகிறது.
ஆதார், பான் கார்டு இணைக்க 2023 மார்ச் வரை இறுதி வாய்ப்பு – இணைக்கும் எளிய வழிமுறைகள்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது வசதி படைத்த மாணவர்கள் நீட் தேர்வில் பயிற்சி பெற கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஆனால் ஏழை குழந்தைகள் பொருளாதார நெருக்கடியால் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்க முடிவு செய்தது. அதன்படி வரும் 26ம் தேதி நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 412 மையங்களில் இப்பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.