தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் நாளை (ஆக.11) மின்தடை – மின்சார வாரியம் தகவல்!

0
தமிழகத்தின் 'இந்த' பகுதிகளில் நாளை (ஆக.11) மின்தடை - மின்சார வாரியம் தகவல்!
தமிழகத்தின் 'இந்த' பகுதிகளில் நாளை (ஆக.11) மின்தடை - மின்சார வாரியம் தகவல்!

தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் நாளை (ஆக.11) மின்தடை – மின்சார வாரியம் தகவல்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 11) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ள காரணத்தால், மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சு. ஆனந்தகுமார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். ஏனெனில் மின் கம்பங்களில் இருந்து சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பணிகள் மின்வாரிய ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அவ்விதமாக நாளை (ஆக.11) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படவுள்ளதாக அம்மாவட்ட மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆக.12 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் :

வேடசந்தூர், நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியாா்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூா், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்கிராம்பட்டி, சோனாபுதூா், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிபட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான் கோட்டை, ஒட்ட நாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராம கவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, உதவிச் செயற்பொறியாளர் சு. ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!