தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக முன்னறிவிப்புடன் மின்தடை செய்யப்படுகிறது. அந்தவகையில் நவம்பர் 2ம் தேதியான நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின்சார துறையில் வைக்கப்படும் புகார்கள் அனைத்தும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகள் தொடங்க கேட்கப்படும் மின் இணைப்புகளுக்கான கோரிக்கை அடுத்த நாளே செயல்படுத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்கு முன்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதை மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், நவம்பர் 2ம் தேதியாகிய நாளை தமிழகத்தில் சில இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ள காரணத்தால் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே மின்தடை செய்யப்படும் என்றும்,பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம் பகுதிகள்.
மதுரை:
மதுரை மாவட்டம் மகாத்மா காந்தி நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட குலமங்களம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.
திருநின்றவூர்:
திருநின்றவூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (02.11.2022) மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.