தமிழகத்தில் தக்காளியின் விலை மேலும் ரூ.20 அதிகரிப்பு – பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் வெளி சந்தைகளில் தக்காளியின் விலை மேலும் ரூ.20 அதிகரித்துள்ளதாகவும் இதனால் கிலோவுக்கு ரூ.120 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை:
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தினால் தக்காளி பயிரிட முடியாமல் மொத்தமாக வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால், நாள் ஒன்றிற்கு வழக்கமாக 1100 டன் தக்காளி சந்தைகளில் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது 400டன் மட்டுமே சந்தைக்கு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தக்காளியின் விலை இரட்டிப்பாக மொத்தவிலையில் ரூ.50 முதல் ரூ.70 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் IAS அதிகாரிகள் திடீர் மாற்றம் – அரசின் அதிரடி உத்தரவு!
இந்நிலையில் தற்போது மேலும் 20ரூபாய் அதிகரிக்கப்பட்டு மொத்தவிலையில் ரூ.70 முதல் ரூ.90 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், சில்லறை விற்பனையில் ரூ.120 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைக்கு கூட தக்காளி வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், தற்போதும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் தக்காளியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.