தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டிய ஒரு கிலோ தக்காளியின் விலை – பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் கனமழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதனால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காய்கறி விலை உயர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தற்போது தான் தங்களது பொருளாதாரத்தை சரி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகின்றது.
அரசு பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
தமிழகத்திற்கு பெரும்பாலான காய்கறிகள் வெளி மாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இவ்வாறு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் சென்னையில் 1 கிலோ தக்காளியின் விலை நூறு ரூபாயை எட்டியுள்ளது. அதாவது காய்கறி வரத்து இல்லாததால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவத்தேர்வு நவ.16ல் தொடக்கம்!
அதனை தொடர்ந்து சில்லறை விற்பனையில் 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி மட்டுமல்லாது இதர காய்கறிகளும் கணிசமாக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து ஒரு கிலோ கேரட் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இவ்வாறு காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.