தமிழகத்தில்  நீடிக்கும் வறண்ட வானிலை  – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில்  நீடிக்கும் வறண்ட வானிலை  - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில்  நீடிக்கும் வறண்ட வானிலை  - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நீடிக்கும் வறண்ட வானிலை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த காலநிலை அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. அத்துடன் வடமாநிலங்களை போல தமிழகத்திலும் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும் அதிக காலை நேரங்களில் மலை பகுதிகளில் அடர் பனிமூட்டம் தென்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இன்றும் நாளையும் (ஜன. 18, 19) தமிழகத்தின் உள்‌ மாவட்டங்களில்‌ குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்‌ 3 டிகிரி செல்‌சியஸ்‌ குறைவாக இருக்கக்கூடும்‌. அத்துடன் ஓரிரு இடங்களில்‌ அதிகாலை வேளையில்‌ லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 22ம் தேதி வரை அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகளில்‌ இரவு நேரங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ உறை பனிக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஜன. 20, 21, 22ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்‌சயஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!