அதிரடியாக உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – சவரன் ரூ. 42,000 – ஐ கடந்தது.. அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் ஏற்றம் அடைந்து வருகிறது.
தங்கம் விலை:
உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வருடத்தில் கொரோனா பேரிடர், உக்ரைன் – ரஷ்யா போர், பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தினதோறும் மாற்றமடைந்து வருகிறது.
பட்ஜெட் 2023: வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு? நிதியமைச்சர் வெளியிட போகும் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு சவரன் 42,000-ஐ எட்டியுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ரூ. 42,600க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.35 அதிகரித்து ரூ. 5,325க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இன்று ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ. 74.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தங்கத்தின் விலைரூ. 43,000-ஐ நெருங்கி வருவது பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.