இன்று தமிழக மாவட்டங்களில் மழை பொழியும் – மக்களை குளிர்வித்த தகவல்!

0
இன்று தமிழக மாவட்டங்களில் மழை பொழியும் - மக்களை குளிர்வித்த தகவல்!

அதிகபட்ச வெப்பநிலையால் வாடி வதங்கிய நிலையில் இருக்கும் தமிழக மக்களை குளிர்விக்கும் வகையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் தற்போது கொளுத்தும் வெயில் நிலவி வருகிறது. கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே பல மாவட்டங்களிலும் வெப்பநிலை சதத்தை எட்டி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

மார்ச் 29 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையிலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்ஸியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல எந்தவித எச்சரிக்கை அறிவிப்புகளும் குறிப்பிடப்படவில்லை.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!